திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வடசங்கந்தி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு முகக்கவசம் இரண்டாவது முறையாக வழங்கப்பட்டது. இதற்காக திருப்பூரில் இருந்து 700 முக கவசங்கள் வரவழைக்கப்பட்டு வழங்கியதாக வடசங்கந்தி கிராமத்தலைவர் மோகன் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பாக்கியவதி பாலதண்டாயுதம், முருகேசன் சபாபதி, பிரேமா முருகேசன், வீரகுமார் ராமசாமி, முருகப்பாண்டி மாணிக்கம், சுமதி பாலசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள் என்று தெரிவித்த மோகன், வடசங்கந்தி புளு வாரியர் இளைஞர் மன்றத்தை சேர்ந்த சபரி குமார், சூர்யா ரவி, பொதுவடை முருகேசன், குமரேசன் மனோகர், கோகுல் முருகேசன் ஆகியோர் கபுசுர குடிநீர் கசாயம் தயாரிக்கவும், வழங்கியும் உதவினார்கள் என்றும் கூறினார்.
வடசங்கந்தி கிராமத்தில் கிருமி நுழைவதை தடுக்க இன்று இரவு அனைவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் சாம்பிராணி புகை போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.