Friday, September 13, 2013

தெய்வக்கன்னி காலமானார்

ஓவரூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மனைவி பெயர் தெய்வக்கன்னி (வயது 56). வேப்பஞ்சேரி வங்கான தேவர் மகளான இவருக்கு சண்முகம் என்கிற ஒரு மகனும், ராணி, என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

தெய்வக்கன்னி கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். நேற்று காலை கவலைகிடமானார். அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை 4 மணிக்கு காலமானார். .

வேப்பஞ்செரியில் உள்ள அவரது தம்பியும், மருமகனுமான கோவிந்தராஜ் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. செய்தி அறிந்து உறவினர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இன்று மதியம் 12 மணிக்கு இறுதி சடங்கு நடை பெற்றது. அவரது சிதைக்கு மகன் சண்முகம் தீ மூட்டினார். 

சங்கருக்கு ஆண் குழந்தை பிறந்தது

வடச்ங்கந்தி சொக்கப்பன் நகரில் வசிப்பவர் வீரப்பசாமி. இவரது மூன்றாவது மகன் சங்கர். இவர் சென்னையில் உள்ள் ஸ்டுடியொ கிரீன் பட நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வ்வாகியாக் இருக்கிறார். இவருக்கும் பட்டுக்கோட்டை முனி‌‌யா‌ண்‌‌டி‌த்‌ தே‌வர்‌ - ரா‌ஜசுலோ‌சனா‌ தம்‌பதி‌களி‌ன்‌ இரண்‌டா‌வது மகள்‌ அமுதா‌வு‌க்‌கும்‌ சென்ற ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

கடந்த மூன்றாம் தேதி பிரசவ வலி வந்து பட்டுக்கோட்டையில் உள்ள கிரேஸ் மருத்துவ மனையில் அமுதாவை சேர்த்தனர். மறுநாள் 4ஆம் தேதி காலை 06.35 மணிக்கு அழகான் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த செய்தி அறிந்து சங்கரின் தாயார் வைரக்கண்ணு, தந்தை வீரப்பசாமி, தாய் மாமன் சண்முக சுந்தரம் ஆகியோர் நேரில் சென்று வழ்த்தினர். உறவினர்களும், நண்பர்களும் நேரிலும், தொலைபேசியின் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்து, வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார் சங்கர்