Friday, November 29, 2013

மன்னாரு என்கிற ஜெகநாதன் மறைந்தார்

வடசங்கந்தி தெற்கு தெருவை சேர்ந்தவர் மன்னாரு என்கிற ஜெகநாதன். இவர் மா‌ரி‌முத்‌து மகள்‌ வை‌ரம்‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ரவி, ஐயப்‌பன், மணி‌கண்‌டன்‌ என நா‌ன்‌கு மகன்‌களும், ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

சென்ற ஆண்டு வைரம் காலமானார். அவர் இறந்த தேதியிலேயே இந்த ஆண்டு நேற்று முன்தினம் காலை மன்னாரு காலமானார். உறவினர்களும், நண்பர்களும் திரளாக கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்   இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது. 


குமாரு மகளுக்கு கல்யாணம்

திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் வசிப்பவர் கணேசதேவர். இவரது மகன் சிவக்குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்கிற மகள் இருக்கிறார். இவர் பி.எஸ்.சி பட்டதாரி.

சுகன்யாவுக்கும் மருதூர் தெற்கு  செல்வக்குமார் என்பவருக்கும் வருகிற டிசம்பர் 09 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மருதூர் தெற்கு கந்த பவுன்ராஜ் திருமண அரங்கில் திருமணம் நடைபெறுகிறது.

அன்று மாலை 5.30 மணிக்கு திருத்துறைப்பூண்டி மங்கை மகாலில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சிவக்குமார், அவரது மனைவி மாலா, தந்தை கணேச தேவர், தாயார் ராஜலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

மணமகன் செல்வக்குமார் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் தெற்கு வேம்பையாதேவர் - ருக்மணி அம்மாள், சற்குண தேவர் -கோகிலத்தம்மாள் ஆகியோரின் பேரனும், இராமையத்தேவர் - கலைச்செல்வி, வணங்காமுடிதேவர் - மல்லிக்கா ஆகியோரின் மகன் ஆவார். இவர் சிங்கப்பூரில் பி.எஸ்.ஏ கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார்