Saturday, June 3, 2017

கலையரசி இரண்டாவது மகன் திருமணம்



எக்கல் அழகு - தங்கப் பாப்பம்மாள் தம்பதியர் மகன் முருகேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வேதையன் – சென்பகவள்ளி தம்பதிகளின் ஒரே மகள் கலையரசி.

சென்னை தாம்பரம் அருகே உள்ள பொத்தேரி, காவனூர் பகுதியில் உள்ள செந்தமிழ்நகரில் வசித்து வரும், இவருக்கு விஜயேந்திரன், அறிவழகன் என்கிற இரு மகன்களும், சென்பக சூர்யா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

மூத்தமகன் விஜயேந்திரனுக்குவலிவலம்குழந்தைவேலு மகள்ஜெயந்திஎன்பவரை திருமணம்செய்து வைத்தார். மகள் சென்பக சூர்யாவுக்கு குன்றத்தூரில் திருமணம் செய்து வைத்தார். 

இன்று இரண்டாவது மகன் அறிவழகனுக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ராஜகோபால் மகன் திருமணம்.



வடசங்கந்தி மேலத்தெரு ஆர்.கிருஷ்ணமூர்த்தி – மங்கையகரசி தம்பதிகளின் மகன் கி.ராஜகோபால். இவர் வேளாங்கன்னி அருகே பிரதாபராமபுரம் சுப்பிரமணியன் - பஞ்சவர்ணம் மகள் திலகவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விமலேஷ்வரன், ஜெயப்பிரியன் என இரு மகன்கள் உள்ளனர். 

இதில் மூத்த மகன் விமலேஷ்வரனுக்கு, தனது மைத்துனர் பிரதாபராமபுரம் கே.எஸ்.வீரகணபதி – சுதா தம்பதிகளின் மகள் சங்கவி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.  

வேதாரண்யம் சாலையில் உள்ள பிரதாபராமபுரம் ஞானம்பாள் ஜெயரம் திருமண மண்டபத்தில், ஜுன் மாதம் 1 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு விமலேஷ்வரன் – சங்கவி திருமணம் நடைபெற்றது. 

திருமண விழாவில் சங்கீத்குமார், அபிநயா சங்கீத்குமார், ஆனந்தவள்ளி அம்பிகா, கே.எஸ்.பூபதி, சரோஜா, கே.எஸ்.சபாபதி, பானுமதி, கலைச்செல்வி தனபதி, கே.எஸ்.நீதிபதி, தாமரைச்செல்வி, கே.பாலமுருகன், அமராவதி, ரேவதி வைரமுத்து, எம்.உலகநாதன், உ.ராஜேஸ்வரி, தமிழ்செல்வி சந்திரசேகரன், எம்.கல்யாணசுந்தரம், க.சரோஜா, கே.முருகேசன், கே.வசந்தா, கே.குமார், கு.மங்கை, ஆர்.ஜெயப்ப்ரியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

வடசங்கந்தி வேதையன் காலமானார்.



வடசங்கந்தி கிராமத்தின் மேலத்தெருவில் வாசித்த மூத்தக்குடி நடேசன் குடும்பம்.

பெரும் நிலக்கிழாரான இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு வடிவேல், குஞ்சு, வீரமுத்து என மூன்று மகன்களும், இரண்டாவது மனைவிக்கு சுந்தரேசன், வைத்தி என இரு மகன்களும் பிறந்தனர்.

இதில் குஞ்சு என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தவர் வேதையன். இவருக்கு பூதலூரில் வசித்த, உதயமார்தாண்டபுரம் செண்பகவள்ளி என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கலையரசி என்கிற ஒரே மகள்.

கலையரசியை, எக்கல் அழகு - தங்கப் பாப்பம்மாள் தம்பதியர் மகன் முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு விஜயேந்திரன், அறிவழகன் என்கிற இரு மகன்களும், சென்பக சூர்யா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

அனைவரும் சென்னை தாம்பரம் அருகே உள்ள பொத்தேரி, காவனூர் பகுதியில் உள்ள செந்தமிழ்நகரில் வசித்து வருகின்றனர்.

வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்த வேதையன், கடந்த (மே 30) அன்று அதிகாலை காலமானார்.

உறவினர்களும், நண்பர்களும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வடசங்கந்தி முன்னாள் ஊராட்சி தலைவர் க.உலகநாதன், உ.காசியம்மாள், வை.ஆதீஸ்வரன், ஆ.கஸ்தூரி, வை.பாலசுப்பிரமணியன், பா.சரோஜா, மதி கணேசன், தெய்வானை செல்வராஜ், சு.நடராஜன், ந.உஷா, பொ.மனோன்மனி, பொ.பாலசுப்பிரமணியன், நாச்சிக்குளம் சரவணன், ச.புஷ்பவள்ளி, வை.ஜெயராமன், வை.சரவணன், அ.முருகேசன், அ.வைரமூர்த்தி, வை.வினோதினி, முத்து, பாப்பாத்தி அம்மாள், வீ.வைரக்கண்ணு, ஜி.பாலன், பா.தமிழ்செல்வி, நா.தமிழ்செல்வி, கே.குமார், கு.செல்வி, அஞ்சான், அ.பன்னீர்செல்வம், ப.சரஸ்வதி, க.ஞானாம்பாள், ஆர்.தங்கபாண்டி, ஆர்.லோகேஸ்வரி உட்பட ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

மாலை ஐந்து மணிக்கு மறைமலைநகர் மின் மயானத்தில் வேதையன் உடல் எரியூட்டப்பட்டது. அவரது மருமகன் முருகேசன் தீ மூட்டினார்