Saturday, June 3, 2017

ராஜகோபால் மகன் திருமணம்.



வடசங்கந்தி மேலத்தெரு ஆர்.கிருஷ்ணமூர்த்தி – மங்கையகரசி தம்பதிகளின் மகன் கி.ராஜகோபால். இவர் வேளாங்கன்னி அருகே பிரதாபராமபுரம் சுப்பிரமணியன் - பஞ்சவர்ணம் மகள் திலகவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விமலேஷ்வரன், ஜெயப்பிரியன் என இரு மகன்கள் உள்ளனர். 

இதில் மூத்த மகன் விமலேஷ்வரனுக்கு, தனது மைத்துனர் பிரதாபராமபுரம் கே.எஸ்.வீரகணபதி – சுதா தம்பதிகளின் மகள் சங்கவி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.  

வேதாரண்யம் சாலையில் உள்ள பிரதாபராமபுரம் ஞானம்பாள் ஜெயரம் திருமண மண்டபத்தில், ஜுன் மாதம் 1 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு விமலேஷ்வரன் – சங்கவி திருமணம் நடைபெற்றது. 

திருமண விழாவில் சங்கீத்குமார், அபிநயா சங்கீத்குமார், ஆனந்தவள்ளி அம்பிகா, கே.எஸ்.பூபதி, சரோஜா, கே.எஸ்.சபாபதி, பானுமதி, கலைச்செல்வி தனபதி, கே.எஸ்.நீதிபதி, தாமரைச்செல்வி, கே.பாலமுருகன், அமராவதி, ரேவதி வைரமுத்து, எம்.உலகநாதன், உ.ராஜேஸ்வரி, தமிழ்செல்வி சந்திரசேகரன், எம்.கல்யாணசுந்தரம், க.சரோஜா, கே.முருகேசன், கே.வசந்தா, கே.குமார், கு.மங்கை, ஆர்.ஜெயப்ப்ரியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

No comments:

Post a Comment